கடலூர், செப்டம்பர் 23 | புரட்டாசி 07:
கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக கேஆர்எஸ் அணை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சாத்தனூர் அணை வழியாக வினாடிக்கு சுமார் 3,000 கனஅடி நீர் தென்பெண்ணையாற்றில் விடப்பட்டு வருகிறது. இந்த நீர் தற்போது கடலூர் மாவட்டத்தை வந்தடைந்து ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதனால், கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள கும்தாமேடு தரைப்பாலம் முழுவதுமாக மூழ்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தரைப்பாலம் வழியாக கும்தாமேடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் தினசரி கடலூருக்கு சென்று வருவது வழக்கம். தற்போது அவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது:
-
ஆற்றில் இறங்க வேண்டாம்
-
கால்நடைகளை ஆற்றில் கழுவவோ, அழைத்துச் செல்வதோ வேண்டாம்
-
வெள்ளம் காரணமாக அசம்பாவிதம் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்
அதே சமயம், புதுச்சேரிக்கு தினசரி சென்று வருபவர்களும் இந்த போக்குவரத்து தடையால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளநீர் தொடர்ந்து அதிகரிக்கும் சூழ்நிலையில், அதிகாரிகள் ஆற்றங்கரையோர மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
Permalink:
.jpg)
No comments:
Post a Comment